Wednesday, February 17, 2010

பொது


பலிகடா



அடுத்து நிற்கும் ஆடுகளை பார்த்து
ஒருக்களித்து சிரிக்கிறது
காளியின் முன் காவு கொடுக்கப்பட்ட
ஆட்டின் தலை;
நினைவு கலைந்து நிமிர்கிறேன்
வோட்டு சாவடியில் முதல் ஆளாக
நான்.



கிரிவலம் -  நிதர்சனம்



"இந்த ஈசான லிங்கம் எவ்வளவு தூரம் தான் இருக்கோ? சே!"
பக்கத்தில் நிற்கும் அம்மாவின் அங்கலாய்ப்பு;


" மச்சி! அந்த பிகர் சூப்பர், நல்ல தரிசனம்!"
இளையோரின் உற்சாகம்;

வரிசையில் நிற்பதில் ஏற்பட்ட தகராறில்
என் மேல் வந்து விழும் செருப்பு:


தன் மீது குறிபார்த்து வீசப்படும் கணக்கற்ற காசுகளினால்
முகம் சேதமாகி முழிக்கும் குபேரலிங்கனார்:


மலையை சுற்றும்போது சுற்றி நடக்கும் எதையும்
கவனிக்கக்கூடாது என்று கூறியபடி நண்பனை பார்க்கிறேன்;


கண்கள் மூடியபடி வாய் மந்திரம் உச்சரித்தபடி
மோன நிலையில் அவன்;


காலைக்குள் சென்னை செல்ல பஸ் கிடைக்கவேண்டும் என்று வேண்டியபடி


அண்ணாமலையார் முன் உள்ள நெருப்பில்
பாலிதீன்கவரோடு சூடனை விட்டெறிந்து


அவசரத்தில் வழுக்குகிறேன் அங்கிருந்து.

                                                                           - பாலா