திரு+ பரம் + குன்றம் = திருப்பரங்குன்றம் என்றானது. பரம் உறையும் குன்று. கதிர்வேல் செங்கோடன் முருகனது படைவீடுகளில் முதல் படைவீடு. அடிவாரத்தில் முருகனது திருக்கோயில், ஒருபுறம் உமையாண்டாள் குடவரைக்கோயில், மலையின் பல பகுதிகளில் அமணர் பள்ளிகள், இன்னொருபுறம் காசிவிசுவநாதர் ஆலயம் (முருகன் கை வேலால் உண்டான சுனை உள்ள இடம்), அருகே இஸ்லாமிய நண்பர்கள் வழிபடும் ஐயா சிக்கந்தர் பாஷா ரஷீத் அவர்களின் தர்கா என பல சமயப் பொறை நிலவும் மலை.
மறக்கமுடியாத தலம். அக்டோபர் 2012 இறுதியில் அங்கு நண்பர் செந்தில்குமார்(அண்ணா சிலிகான் டெக்னாலஜி) அவர்களுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அங்கு கேட்ட ஒரு சொற்றொடர் " முருகனே! சிலம்பனே!" தமிழ் இறையே போர்வீரனாக வழிபடப்படும் மரபு நிலவுவதை அதன் மூலம் காணலாம். அந்த சொல்லைப் பிடித்து செல்லும்போது தமிழ் தற்காப்பு கலைகள் வரையில் கொண்டு சென்றது. அது என்னைக் கொண்டு சென்று நிறுத்திய இடங்கள் அருகே இருந்த கிராமங்கள் இரண்டு, ஒன்று விளாச்சேரி, மற்றொரு இடம் மாடகுளம், அங்கு கண்ட கேட்ட சம்பவங்களை வரும் வாரங்களில் படிப்படியாகக் காணலாம். முதலில் அங்கு எடுத்த புகைப்படங்களை நண்பர்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்:
மறக்கமுடியாத தலம். அக்டோபர் 2012 இறுதியில் அங்கு நண்பர் செந்தில்குமார்(அண்ணா சிலிகான் டெக்னாலஜி) அவர்களுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அங்கு கேட்ட ஒரு சொற்றொடர் " முருகனே! சிலம்பனே!" தமிழ் இறையே போர்வீரனாக வழிபடப்படும் மரபு நிலவுவதை அதன் மூலம் காணலாம். அந்த சொல்லைப் பிடித்து செல்லும்போது தமிழ் தற்காப்பு கலைகள் வரையில் கொண்டு சென்றது. அது என்னைக் கொண்டு சென்று நிறுத்திய இடங்கள் அருகே இருந்த கிராமங்கள் இரண்டு, ஒன்று விளாச்சேரி, மற்றொரு இடம் மாடகுளம், அங்கு கண்ட கேட்ட சம்பவங்களை வரும் வாரங்களில் படிப்படியாகக் காணலாம். முதலில் அங்கு எடுத்த புகைப்படங்களை நண்பர்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்:
No comments:
Post a Comment